undefined

கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு... கடற்கரையில் அலைமோதிய கூட்டம்!

 

சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து, முக்கடலும் சங்கமிக்கும் புண்ணியத் தலமான கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை ஒட்டி நேற்று அதிகாலையில், திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரியன் உதயமாகும் அழகிய காட்சியைக் காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் திரண்டனர்.  சூரிய உதயத்தைக் கண்டு ரசித்த பின், பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, அருகிலுள்ள பகவதி அம்மன் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அய்யப்ப பக்தர்களுடன் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் குவிந்தனர்.

சுற்றுலாப் பயணிகள் படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்வையிட்டனர். அங்கிருந்து கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்த்து ரசித்தனர்.

காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உட்படக் கன்னியாகுமரியில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களிலும் காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!