பகீர் வீடியோ!!  கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து  மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்!! 

 

நாகப்பட்டினம் மாவட்டம்  செல்லூரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார்  800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.  கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 25ம் தேதி கல்லூரி மாணவி ஒருவரை கேலி செய்ததில் மாணவ , மாணவிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதன் அடிப்படியில்  எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு இடையே  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர்  தகராறில் ஈடுபட்ட 2  வகுப்பு மாணவர்களையும் அவர்களின்  பெற்றோர்  முன்னிலையில் கடுமையாக  கண்டித்துள்ளார். அத்துடன் பெற்றோரிடம் சொல்லி பிள்ளைகளுக்கு அறிவுரை கூறவும் வலியுறுத்தினார். அப்போது பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத நாகை செல்லூர் பகுதியில் வசித்து வரும்  டவுசர், லுங்கி அணிந்து கொண்டு வந்த 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.

<a href=https://youtube.com/embed/y3l25LyRppU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/y3l25LyRppU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="நாகை அரசு கலை கல்லூரியில் புகுந்த 50 பேர் கொண்ட கும்பல்.. மாணவர்கள் மீது ஆக்ரோஷ தாக்குதல்" width="932">

அவர்கள் வந்ததும் மாணவர்களை தாக்கத் தொடங்கினர். கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அவர்களுடன் பயிலும் சக மாணவர்கள், கல்லூரியின் பிற பணியாளர்கள் அனைவரும்  தடுத்து நிறுத்தியதை பொருட்படுத்தவில்லை.  அந்த கும்பல் தொடர்ந்து கல்லூரி மாணவர்களைத் தாக்க தொடங்கியது.  இச்சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?