undefined

உஷார்... முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு முயற்சி - கொள்ளையனின் விரல்களை கதவில் நசுக்கி விரட்டிய இளம்பெண்!

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிக்க முயன்ற மர்ம நபர்களை, அந்தப் பெண் துணிச்சலாகப் போராடி விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயத்தாறு முத்துராமலிங்கத் தேவர் தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவர் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது மனைவி தனுசியா, தனது ஒரு வயதுக் குழந்தையுடன் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள், திடீரென தனுசியாவின் கண்ணில் மிளகாய்ப்பொடியைத் தூவியுள்ளனர். கண் எரிச்சலால் அவர் நிலைகுலைந்த சமயம் பார்த்து, அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை ஒருவன் பறித்துள்ளான்.

கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க தனுசியா குழந்தையுடன் வீட்டிற்குள் ஓடி, கதவை வேகமாகச் சாத்த முயன்றார். அப்போது: கொள்ளையனின் கை கதவு இடுக்கில் சிக்கியது. தனுசியா கதவை பலமாக அழுத்தியதில் கொள்ளையனின் விரல்கள் நசுங்கின. வலியால் துடித்த கொள்ளையன் பிடியிலிருந்து தங்கச் சங்கிலி கீழே விழுந்தது.

உடனடியாகச் சங்கிலியை எடுத்துக்கொண்ட தனுசியா, வீட்டிற்குள் சென்று சத்தமிட்டுள்ளார். இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த மோதலில் கீழே விழுந்த தனுசியாவிற்கும் அவரது குழந்தையிற்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கயத்தாறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தெற்கு இலந்தைக்குளத்தில் ஒரு பெண்ணிடம் 3.5 சவரன் நகை பறிக்கப்பட்டது. தற்போது மக்கள் நடமாட்டம் மிகுந்த மையப்பகுதியிலேயே இந்தத் துணிகரச் சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களைக் கூண்டோடு பிடிக்கத் தனிப்படை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!