கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண் பக்தர்கள் துடிதுடிக்க உயிரிழப்பு... பகீர் வீடியோ!
பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள புகழ்பெற்ற சீத்லா மாதா கோவிலில், சைத்ரா அஷ்டமி திருவிழாவின் போது நிகழ்ந்த பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் ஏற்பட்ட இந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தில், மூச்சுத்திணறல் மற்றும் மிதிப்பட்டு இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. புனிதமான வழிபாட்டுத் தலம் ரத்தக் களரியாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற கோவில்களில் இது போன்ற விசேஷ நாட்களில் முறையான கூட்ட மேலாண்மை (Crowd Management) இல்லாததே இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போதிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படாதது குறித்துத் தீவிரக் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை இந்தத் துயரம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!