சத்தியமங்கலம் வனத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், டி.என்.பாளையம், பவானிசாகர், கடம்பூர், தலமலை, ஆசனூர் உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நீர்நிலைகள் மற்றும் நீர்தேக்கப் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அதிநவீன கேமராக்கள் மற்றும் பைனாகுலர் கருவிகள் பயன்படுத்தி பறவைகள் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. பருவமழை காரணமாக பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதால், ஈர நில பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் இருந்து பல வலசை பறவைகள் வந்துள்ளதும் உறுதியாகியுள்ளது.
கணக்கெடுப்பின் போது ஊசிவால் வாத்து, தட்டைவாயன், கிளுவை, வெண்புருவ வாத்து, மண்கொத்தி, பச்சைக் காலி, விசிவிசிறிவால் உள்ளான், சேற்றுப் பூனைப்பருந்து, மஞ்சள் வாலாட்டி உள்ளிட்ட பறவைகள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு இறுதி கணக்கெடுப்பு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!