undefined

பத்திரம் மக்களே... இன்று 6 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' அலர்ட் அறிவிப்பு!

 

தமிழகத்தில் இன்று (டிச. 4, வியாழக்கிழமை) ஆறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை ஒட்டி நிலவிய வானிலை அமைப்பு வலுவிழந்துள்ள நிலையில், தற்போது தென் இந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது.

முன்னதாக, 'டித்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது மேலும் வலு குறைந்து இன்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று (டிச. 4) முதல் டிசம்பர் 9-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் புகா் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை மாவட்டம் எண்ணூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் சுற்றியுள்ள பகுதிகளில் தலா 150 மி.மீ. மழை பதிவானது.

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரளக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று (டிச. 4) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, இந்த கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!