அதிர்ச்சி வீடியோ... காதலி முன்னே தாயை கொல்ல முயன்ற காதலன் !
தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகரில் உள்ள சுட்டலபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் சுஷ்மிதாவை காதலித்து வந்தார். இவர்களின் காதல் விவகாரம் சுஷ்மிதாவின் தாய் சாமந்திக்கு தெரிய வந்தது.
அவருக்கு இந்தக்காதலில் உடன்பாடில்லை. மகளுடன் தினம் சண்டை போட்டார். இருவரும் பார்க்க அனுமதிக்கவில்லை. வெளியில் சுஷ்மிதாவை போகவிடாமல் இருவரையும் பிரித்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், சுஷ்மிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது தாய் சாமந்திக்கு மிரட்டல் விடுத்தார்.
அத்துடன் நில்லாமல் சாமந்தியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் ராஜ்குமாரை தடுத்து போலீசில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராஜ்குமாரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!