27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட்… !
நாடாளுமன்றத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் அரசியல் வட்டாரங்களிலும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்வது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று, அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இப்போது மீண்டும் அதே போன்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த காரணத்தால் இந்த பட்ஜெட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
2026–27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாளை பிப்ரவரி 1, 2026 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பணவீக்கம், விவசாயம், தொழில்துறை மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!