லாரிகளுக்கிடையே சிக்கி உடல் நசுங்கி ஒருவர் பலி... அட்டைப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கரம்!
திருவண்ணாமலை ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் உள்ள அட்டைப்பெட்டி தொழிற்சாலையில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி கட்டுப்பாடின்றி நகர்ந்த போது, சிவலிங்கம் மற்றும் இரண்டு சக தொழிலாளர்கள் அதை தடுக்க முயன்றனர். லாரி வேகம் அடைந்ததும் மற்றோர் தொழிலாளர்கள் விலகி, சிவலிங்கம் மட்டும் லாரியை தள்ளி கட்டுப்படுத்த முயன்றார்.
துரதிர்ஷ்டவசமாக, பின்னால் நின்ற மற்றொரு லாரிக்கும் நகர்ந்த லாரிக்கும் இடையில் சிக்கிய சிவலிங்கம் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், என்ஜினை அணைக்காமல் வாகனத்தை விட்டுவிட்ட லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த சிவலிங்கத்திற்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!