தொகுதி மறுசீரமைப்பு ... பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!
தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். தென் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி, இதற்காக ஒரு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைக்க முன்மொழிந்தார்.
அதன்படி, சென்னையில் மார்ச் 22ம் தேதி அன்று இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில், “ஏப்ரல் 6ம் தேதி தமிழகம் வரும் அவரை, பல்வேறு கட்சிகளின் எம்பிக்களுடன் சந்தித்து தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனு அளிக்கவும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளக் கூடாது எனவும், கூட்டு நடவடிக்கை குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நேரில் வழங்கவும் நேரம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!