கொடூரம்!! கணவரை கோடாரியால் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்த மனைவி!!

 

சமீபகாலமாக கொடூரக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. சொல்பேச்சு கேட்காததால் காதலியை துண்டுகளாக்கி நாய்களுக்கு வீசிய காதலன், ரயிலில் தள்ளி கொலை செய்த காதலன், காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி, தூங்கும் போது கல்லால் அடித்து கொலை செய்த மனைவி, கோடாரியால் வெட்டிக் கொலை, போதையில் இருந்த கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து கொலை  என பல்வேறு கொடூரங்கள் தொடர்ந்து வருகின்றன. இதே போல் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி பகுதியில் வசித்து வருபவர்  பிரேந்தர் குர்ஜார். இவருக்கு  5 மனைவிகள் . 4 மனைவிகள் இவருடன் வாழப்பிடிக்காமல் பிரிந்து சென்று விட்டனர்.  இவரை காஞ்சன் குர்ஜார் என்ற பெண் ஐந்தாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் அந்த பெண் தனது கணவரை கோடாயால் தாக்கி அவரது பிறப்புறுப்பை அறுத்து கொன்றார். பின்னர் அவரது உடலை சாலையில் வீசியுள்ளார்.

உயிரிழந்த பிரேந்தர் குர்ஜாரின் உடல்  பிப்ரவரி 21-ம் தேதி போலீசார் கண்டுக்கப்பட்டது. இறந்தவரின் தொண்டை மற்றும் பிறப்புறுப்புகளில் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், காஞ்சன் காவல் நிலையத்தில் புகார் அளித்து அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்ததாக கோட்வாலி காவல் நிலையப் பொறுப்பாளர் அருண் பாண்டே தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் உட்பட சந்தேகத்திற்கிடமான அனைவரையும் விசாரித்து போலீசார் முழுமையான விசாரணையை மேற்கொண்டனர். இதன்போது, ​​உயிரிழந்தவரின் மனைவியும் போலீசாரின் விசாரணையில் சிக்கியுள்ளார். போலீசார் அந்த பெண்ணை காவலில் எடுத்து கடுமையாக விசாரித்தபோது, ​​சம்பவம் முழுவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

தனது கணவர் போதைக்கு அடிமையானவர் என போலீசாரிடம் காஞ்சன் தெரிவித்தார். குடிபோதையில் அவளை மிகவும் சித்ரவதை செய்தார். விசாரணையில், பிப்ரவரி 21-ம் தேதி இரவு தனது கணவரின் உணவில் 20 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தது தெரியவந்தது. முதலில் கணவரை கோடரியால் பலமுறை தாக்கியதாகவும், பின்னர் கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

குற்றத்தை செய்துவிட்டு, காஞ்சன் தனது கணவரின் உடலை துணியால் சுற்றி, சாலையோரத்தில் வீசினார். இதுமட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்ட பெண், சாட்சியங்களை அழிக்க இறந்தவரின் ஆடைகள் மற்றும் செருப்புகளையும் எரித்தார்.காவல்துறையின் கூற்றுப்படி, இறந்த பிரேந்திர குர்ஜரின் ஐந்தாவது மனைவி காஞ்சன் குர்ஜார். முன்னதாக, பிரேந்திராவின் தொல்லையால் நான்கு மனைவிகள் ஏற்கனவே அவரை விட்டு வெளியேறினர். குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்