நியூசிலாந்தை புரட்டிப்போட்ட கோரப் புயல்... 5 பேர் பரிதாப பலி ... 90 விமான சேவைகள் அதிரடி ரத்து!

 

நியூசிலாந்து நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக வீசி வரும் அதிபயங்கர புயல் மற்றும் கனமழையால் அந்த நாடு பெரும் இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த இயற்கை இடர்பாடுகளில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

புயல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆறுகளில் வெள்ளம் அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் திடீர் இயற்கைச் சீற்றத்தால் நியூசிலாந்து நாட்டின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!