undefined

தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுகவுக்கு தகுதி இருக்கிறதா? அமைச்சர் ரகுபதி ஆவேசம்!

 

தமிழகத்தில் நேற்று முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த கூட்டத்தை திமுக அரசின் நாடகம் என விமர்சித்திருந்தார். இதற்கு  அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.


தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து  தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா? அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கிறது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது. பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை.முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு போராடும், தனது உரிமையை வெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?