undefined

பிப்.2 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்!

 

நாளை முதல் பிப்ரவரி 2ம் தேதி வரையில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான தூரல் பெய்த நிலையில் நாலை முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்ரவரி 2 வரை வறண்ட வானிலையே தொடரும். ஜனவரி 27 முதல் 31 வரை குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். இதே நேரத்தில், தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில், இடையிடையே 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!