அடுத்த வாரம் வறண்ட வானிலை… தென் கடலோரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 28 முதல் 30 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இதனைத் தொடர்ந்து 31 முதல் பிப்ரவரி 2 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் வானிலை பெரும்பாலும் உலர்ந்த நிலையில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 3-ம் தேதி மீண்டும் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும். 28 முதல் பிப்ரவரி 1 வரை குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. சில இடங்களில் மட்டும் சற்று குறையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பிடத்தக்க மழை வாய்ப்பு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!