அமெரிக்காவில் அதிர்ச்சி.. வசதிப்படைத்த இந்திய வம்சாவளியினர் மர்ம முறையில் உயிரிழப்பு..!!

 

வசதிப்படைத்த பிரபல இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள டோவரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் கமல் (57). இவரது மனைவி டினா (54), மகள் அரினா (18). ராகேஷ் மற்றும் தீனா இருவரும் எஜுநோவா என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிறுவனம் 2019ல் துவங்கப்பட்டு, 2021ல் மூடப்பட்டது.இந்நிலையில், ராகேஷ், தீனா, அரினா ஆகியோர் பங்களா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை, உறவினர்களிடம் தொடர்பு கொள்ளவில்லை என புகார் வந்ததையடுத்து போலீசார் அந்த வீட்டை சோதனையிட்ட போது அவர்கள் இறந்து கிடந்தனர்.அவர்கள் கொல்லப்பட்டார்களா, எப்படி கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.



ராகேஷ் குடும்பத்தினர் வசித்த 11 படுக்கையறைகள் கொண்ட பங்களா ரூ.40 கோடி மதிப்புடையது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் கொடுத்தவருக்கு, 25 கோடி ரூபாய்க்கு விற்றனர். டோவரில் வசிக்கும் பணக்கார குடும்பங்களில் ராகேஷ் குடும்பமும் ஒன்று. வசதி படைத்தவர்கள் வசிக்கும் டோவரில் கடந்த 3 ஆண்டுகளாக கொலை உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!