பெங்களூருவில் அதிகாலை கோர விபத்து... 7 பேர் பலி!
பெங்களூருவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தொடர் சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.டொப்பாஸ்பெட் – ஹோஸ்கோட் நகர வட்டச் சாலையில் வேகமாக வந்த இரண்டு சொகுசு கார்கள், ஒரு டிரக் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன் மீது ஒன்று அடுத்தடுத்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை சுமார் 5.15 மணியளவில் நடந்த இந்த விபத்தில், வாகனங்களில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!