விடிய விடிய கூட்டம்... ஆம்னி பேருந்து கட்டணங்கள் 3 மடங்கு உயர்வு... யாருமே கண்டுக்கல!
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதைத் தொடர்ந்து சொந்த பந்தங்களோடு பண்டிகையைக் கொண்டாட சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது ஊர்களுக்கு நேற்று காலை முதலே படையெடுக்க துவங்கி விட்டனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் 21 ஆயிரம் பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையிலும், பேருந்துகள் பற்றாக்குறையால் ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது. பல ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் வழக்கத்தைவிட மூன்று மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது. இரவில் பேருந்துகள் கிடைக்காமல், வேறு வழியின்றி 3 மடங்கு கட்டணம் கொடுத்து பயணித்தனர்.
சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழக்கமான கட்டணம் 1,400 – 1,800 ரூபாய் இருந்தது, தற்போது 2,000 – 4,200 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூருக்கு 800 – 1,200 ரூபாய் இருந்த கட்டணம் 3,000 ரூபாய் அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரைக்கு 700 – 1,100 ரூபாய் இருந்த கட்டணம் 3,500 ரூபாய், நாகர்கோவிற்கு 900 – 1,500 ரூபாய் இருந்த கட்டணம் 4,200 ரூபாய் வரை உயர்வு பெற்றுள்ளது. திருச்சிக்கு வழக்கமான 600 – 900 ரூபாய் கட்டணம் 3,000 ரூபாய் அதிகபட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வால் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அரசு ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கட்டண உயர்வு தொடர்பாக எச்சரிக்கை விடும் போதும், நடவடிக்கை தொடர்ந்துவந்ததால், மக்கள் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!