பிரபல கவிஞர் புற்றுநோயால் காலமானார்.... முதல்வர் இரங்கல் ... !

 

புகழ்பெற்ற கவிஞர் முனவ்வர் ராணா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.அவருக்கு வயது 71.  கவிஞர் ராணா  லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ராணா  நீண்ட நாட்களாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது மகள் அவரது இறப்பை உறுதி செய்துள்ளார்.  


நவம்பர் 26, 1952ல், உத்தரபிரதேச மாநிலம்  ரேபரேலியில் பிறந்தவர்  ராணா. இவர்  சிறுவயது முதலே  கஜல்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.   உருது இலக்கியம் மற்றும் கவிதைகளில் பலரது பாராட்டை பெற்றவர்.  பாரசீக மற்றும் அரேபிய தாக்கங்களிலிருந்து விலகி, ஹிந்தி மற்றும் அவதி வெளிப்பாடுகளை உள்ளடக்கியவர்.  அவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!