ரூ15000 கொடுத்தால் ரூ55000 தருகிறேன்.. பணமோசடி வழக்க்கில் சிக்கிய பிரபல நடிகை...!

 

 இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் சமூகவலைதளங்களில் வைரலானவர் அமலா சாஜி. இவர் இன்ஸ்டா பக்கத்தை 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் பின் தொடர்கின்றனர். இதன் மூலம் பிரபலமான அமலா சாஜி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்  இந்த நிலையில்தான் அமலா சாஜி, பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக  பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஒரு மணி நேரத்தில் ரூ. 1000 கொடுத்தால், ரூ. 10,000 ரூபாய் தருகிறேன்.  

ரூ.15,000 கொடுத்தால் ரூ. 5,5000 தருகிறேன் எனச் சொல்லி பணமோசடியில் அமலா சாஜி ஈடுபட்டதாக தொடர் புகார்கள் வரத் தொடங்கின.  இது குறித்த பதிவை வழக்கறிஞர் விக்னேஷ் முத்துகுமார் தன்னுடைய யூடியூப் சேனலில்  வெளியிட்டார். இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அமலா சாஜி பணத்தை வாங்கிக் கொண்டு ரெஸ்பான்ஸ் செய்யவில்லை .  தன்னிடம் இருந்து பணத்தை பறிக்கவே அவர் பார்த்தார் எனவும்  அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து  சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.இந்த விவகாரத்தில் அமலா சாஜி கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இது குறித்து போலீசார் தெரியாத நபர்கள் கொடுக்கும் விளம்பரங்களை பணத்துக்கு ஆசைப்பட்டு பிரபலங்களும் வெளியிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!