பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை... மதுரையில் பரபரப்பு!
மதுரை கரிமேடு சகாய மாதா தெருவில் வசித்து வருபவர் குட்டி சாக்கு என்ற அஜய் பிரசன்ன குமார் . இவர் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பாக சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த குட்டிச்சாக்கு அஜயகுமாரின் நண்பரான தனசேகரன் என்பவரை சிலர் தாக்கி விட்டதாக கூறியதால் அஜய் பிரசன்ன குமார் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .அந்த கும்பல் அஜய் பிரசன்ன குமார் வீட்டிற்கு வந்து அவரது தாயாரிடம் உனது மகனை ஒழுங்காக இருக்க சொல் என எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
இரவு அஜய் பிரசன்ன குமார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது அண்ணன் மற்றும் தாயார் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டனர். நள்ளிரவில் வீட்டிற்குள் சென்ற மர்ம கும்பலானது கதவை உடைத்து வீட்டிற்குள் தூங்கிய அஜய் பிரசன்ன குமார் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். அஜய்குமாரின் தாயார் வந்தபார்த்தபோது வீட்டுகதவை உடைந்திருப்பதை பார்த்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அஜயகுமாரின் உடலை கைப்பற்றி கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட குட்டிசாக்கு என்ற அஜய் பிரசன்ன குமார் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளராகவும் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அஜய்குமார் கொலை தொடர்பாக பழக்கடை சுந்தர்(38), தொத்தா சுந்தர்(36) மற்றும் அவரது பாண்டியராஜன்(26) ஆகிய 3 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!