பட்டாசுக் கடையில் திடீர் தீவிபத்து... 12 பேர் பலி!
ஹூபெய் மாகாணத்தின் ஷியாங்யாங் நகரில் லூனார் நியூ இயர் கொண்டாட்டத்தின் போது பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். புதன்கிழமை மதியம் நடந்த இந்த விபத்தில் தீ வேகமாக பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். விபத்து காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் ஞாயிற்றுக்கிழமை ஜியாங்சு மாகாணத்திலும் பட்டாசு கடையில் வெடிப்பு ஏற்பட்டது. அந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். கடைக்கு அருகில் வாணவேடிக்கை செய்ததால் தீப்பற்றியதாக அதிகாரிகள் கூறினர். ஒரே வாரத்தில் இரண்டு பெரிய விபத்துகள் நடந்ததால் அதிர்ச்சி நிலவுகிறது.
சீனாவில் லூனார் நியூ இயர், அல்லது ஸ்பிரிங் ஃபெஸ்டிவல், கொண்டாட்டத்தில் பட்டாசுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் ஆண்டுதோறும் இவ்வாறான விபத்துகள் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் மத்திய அரசு பட்டாசு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!