undefined

சென்னை ஃபோரம் மாலில் பயங்கர தீ விபத்து... அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - மீட்புப் பணிகள் தீவிரம்!

 

சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் இன்று பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

வணிக வளாகத்தின் கீழ்த்தளத்தில் செயல்பட்டு வரும் ஒரு பிரபல உணவகத்தில் இருந்து முதலில் புகை கிளம்பியுள்ளது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனப் பரவத் தொடங்கியது. உணவகத்தின் சமையல் கூடத்தில் ஏற்பட்ட மின்கசிவு அல்லது எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்தவுடன் வடபழனி மற்றும் அசோக் நகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. மாலில் பரவிய புகையினால் மீட்புப் பணியில் ஆரம்பத்தில் சற்றுத் தொய்வு ஏற்பட்டாலும், தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பொருத்திக்கொண்டு உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ ஓரளவுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட சிலருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் உள்ளே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக வடபழனி சந்திப்பு மற்றும் 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!