undefined

  கால்பந்து போட்டியில் வெடித்து சிதறிய பட்டாசு.. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. ஷாக் வீடியோ!

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் பட்டாசு வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கால்பந்து போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு பட்டாசுகள் வெடித்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். அரிக்கோடு அருகே உள்ள தேரட்டம்மலில் நடந்த கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரிக்கோடு போலீசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கேரளாவின் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு அருகே பட்டாசுகள்  பற்ற வைத்தபோது தான் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த விபத்து நிகழ்ந்தது. "பட்டாசுகள் வெடித்து பார்வையாளர்கள் மீது பரவியது. காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?