இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்... நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 7 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!
Jan 21, 2026, 08:55 IST
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அவர்களுடன் சென்ற விசைப் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை கப்பல் விரைந்து வந்து மீனவர்களை சுற்றிவளைத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீனவர்களை கைது செய்து நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!