4வது நாளாக 31 விமானங்கள் ரத்து...சென்னையில் பயணிகள் கடும் அவதி.. !
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பல நாடுகள் விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. இதன் தாக்கம் சென்னை விமான நிலையம் மீதும் தொடர்கிறது.
கடந்த சனிக்கிழமை 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை 33 விமானங்களும், திங்கட்கிழமை 36 விமானங்களும் ரத்தானது. இந்நிலையில் 4வது நாளாக நேற்று ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 16 புறப்பாடு, 15 வருகை விமானங்கள் என மொத்தம் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நேரங்களை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளுக்கான சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியில் உள்ளனர். நிலைமை சீராகும் வரை மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!