undefined

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா வென்டிலேட்டரில் அனுமதி - உடல்நிலை கவலைக்கிடம்!

 

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பி.என்.பி.) தலைவருமான கலீதா ஜியாவின் (வயது 80) உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் தற்போது செயற்கையாக சுவாசிக்க வைக்கும் கருவியான வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டுள்ளதாக அவருடைய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கலீதா ஜியாவின் உடல்நிலை குறித்துப் பேசிய மருத்துவக் குழுவின் தலைவர் ஷஹாபுதீன் தாலுக்தார், அவருக்கு சுவாசப் பிரச்சினை தீவிரமானதாகவும், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கார்பன் டை ஆக்ஸைடு அளவு உயர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு ஓய்வு அளிப்பதற்காக அவர் வென்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டுள்ளார்.

கலீதா ஜியாவுக்குச் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துள்ளதால், அவருக்குத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ரத்தமும் ஏற்ற வேண்டியுள்ளதாகவும், அவரது இருதயக் குழாயிலும் பிரச்சனை கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் குழுத் தலைவர் கூறியுள்ளார். கலீதா ஜியா கடந்த நவம்பர் 23ம் தேதி முதல் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை வங்கதேசத்தின் பிரதமராகப் பதவி வகித்த கலீதா ஜியா, கடந்த ஆண்டு மாணவர் போராட்டம் காரணமாகப் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பிறகு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!