அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கொடைக்கானலில் உறைபனி எச்சரிக்கை!
நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு உறைபனி ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் உறைபனி காணப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 21, 22-ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 23-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!