சல்மான் கான் கொலை முயற்சி வழக்கில் கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்ணோய் கைது!
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு கடந்த ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் அவரை கொலை செய்ய திட்டமிட்டது உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் தேடப்பட்டுக் கொண்டிருந்த கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்ணோயின் சகோதரர் அன்மோல் பிஷ்ணோயை, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவுடன் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.
குற்ற உலகில் செயல்பட்ட அன்மோல் பிஷ்ணோய், வெளிநாட்டிலிருந்து இந்திய கும்பல்களுக்கு வழிகாட்டி வந்ததாகவும், சல்மான் கான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ‘மூளை’யாக செயல்பட்டு வந்தார் எனக் கருதப்பட்டது.
நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்தவுடன், விமான நிலையத்திலேயே என்ஐஏ அதிகாரிகள் அன்மோலை கைதுசெய்து எடுத்துச் சென்றனர். சல்மான் கானை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல், மிரட்டல், ஆயுத வசதி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!