அரசுப் பேருந்து டயர் வெடித்து 20 பேர் படுகாயம்... பெரும் பரபரப்பு!
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று சுமார் 55 பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி சென்றது. ஓட்டுநர் சுப்புராஜ் பேருந்தை இயக்கி வந்தார். சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் பகுதியில் மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்பக்க டயர் திடீரென வெடித்தது.
உடனே ஓட்டுநர் பிரேக் அடித்த நிலையில், பேருந்தின் பின்பக்க ஆக்சல் துண்டாகி தனியாக விழுந்தது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இடதுபுறமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் பேருந்து அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரடைந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!