ஆம்னி பேருந்து பைக் மீது மோதி அரசு பள்ளி ஆசிரியை பலி!
Dec 10, 2025, 14:45 IST
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர் மணிகண்டன் (42), அவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியை சுகன்யா (35) ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு இருவரும் பைக்கில் சென்றபோது, உத்தமபாளையம் அருகே எதிரே வந்த வேகமான ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. இதில் கணவன்–மனைவி இருவரும் படுகாயமடைந்து சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!