ஒரே நாளில் 2 மிரட்டல் சாதனைகள் படைத்த ஹர்த்திக் பாண்டியா... தென்னாப்பிரிக்காவைச் சிதறடித்த வேகம்!
Dec 20, 2025, 17:50 IST
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது அசுர வேக ஆட்டத்தால் இரண்டு பிரம்மாண்ட சாதனைகளை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி முத்திரை பதித்தது. இளம் வீரர் திலக் வர்மா 73 ரன்கள் குவித்துத் தூணாக நிற்க, மறுபுறம் ஹார்திக் பாண்டியா தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 16 பந்துகளிலேயே அரைசதம் கடந்து மைதானத்தை அதிர வைத்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!