undefined

சீனாவுக்கும் சென்று வந்துள்ளார்... ஜோதி மல்ஹோத்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

 

ஹரியானா மாநிலத்தில்  ஹிசார் மாவட்டத்தில் வசித்து வருபவர்  ஜோதி மல்ஹோத்ரா. யூடியூபில் 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வருகிறார். இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரது லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றை  பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் துாதரகத்தில் பணியாளர் டேனிஷ் என்பவரின் உதவியுடன், பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு வி.வி.ஐ.பி., போல் நடத்தப்பட்டார். அப்போது, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., அமைப்பைச் சேர்ந்த அலி ஹசனுடன்  பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரிடையேயான வாட்ஸ்அப் உரையாடலின் போது, ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு சென்று வந்த சமயத்தில், சீனாவுக்கும் பயணம் செய்துள்ளார். இதனால், அவர் மத்திய உளவுப்பிரிவின் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டார்.மே 17ம் தேதி கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ராவை முதலில் அவர் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு மே 22 ம் தேதி  மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் விசாரணைக்காக நீதிமன்றம் கூடுதலாக 4 நாட்கள் காவலில் அனுமதி அளித்த நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில், யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ஹிசார் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?