தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு... மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிப்பொழிவு காணப்படலாம்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையிலே லேசான பனிப்பொழிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று டிசம்பர் 29ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!