நாளை தோழர் நல்லகண்ணு படித்த பள்ளிக்கு விடுமுறை!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பிறந்த ஆர். நல்லகண்ணு இன்று சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு செய்தி வெளியானதும் ஸ்ரீவைகுண்டம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது.
அவர் ஆரம்பக் கல்வி பயின்ற குமரகுருபரர் சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் இன்று அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வீரவணக்கமும் நிகழ்த்தப்பட்டது.
அவரது மறைவை முன்னிட்டு நாளை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதேபோல் குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் நாளை விடுமுறை விடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!