சரக்கு லாரி ஆம்னி பேருந்து மீது மோதி கோர விபத்து… சிறைக் காவலர் பலி!
Jan 23, 2026, 11:10 IST
சாத்தூர் அருகே சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் சிறை காவலர் லெனின் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையிலிருந்து திசையன்விளை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லெனின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!