undefined

சூறைக்காற்று... சென்னை, திருவள்ளூர் உட்பட 5 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. வெளியே போகாதீங்க!

 

'டிட்வா' புயல் காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (டிசம்பர் 1) அடுத்த சில மணி நேரங்களுக்கான மழை எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்தில் (மதியம் 1 மணி வரை) 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைக் கவனித்து, அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. மழை காலங்களில் மின் சாதனங்களை கவனமுடன் கையாளுங்க.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!