“எவ்ளோ சொல்லியும் கேட்கலை..” கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் தலையை வெட்டி வாசலில் வைத்த கணவன்!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவில் வசித்து வருபவர் 26 வயது அஜித். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், 6 மற்றும் 2 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுதாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது குறித்து அறிந்த கணவன், மனைவி சுதாவிடம் இது குறித்து கேட்டு வந்ததில் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த அஜித், மனைவி வீட்டில் இல்லாததை கவனித்து, சுதாவைத் தேடி சென்றுள்ளார். அப்போது அவர் அருகிலுள்ள பக்கத்து வீட்டு இளைஞரின் வீட்டிலிருந்து வெளியே வருவதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். அப்போது கோபத்தில் அஜித் சுதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று தாக்கிய பின்னரும் ஆத்திரம் தீராமல் அரிவாளை எடுத்து சுதாவை தலையை வெட்டியுள்ளார். அதன் பின்னர் சுதாவின் தலையை வாசலில் வைத்துள்ளார். அலறியபடியே அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவலளித்த நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, அஜித்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!