ஈகோவால் பிரிந்திருக்கும் தலைவர்கள் ஒன்று சேர்ந்தால் அதிமுக ஆட்சியமைக்கும்... ஓபிஎஸ் பேட்டி
2026ல் அதிமுக ஆட்சி அமைக்க ஈகோ பிடித்த தலைவர்கள் எல்லாம் ஈகோவை மறந்து ஒன்று சேர வேண்டும்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆர் ஜெயலலிதா உடன் மிகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார்.வாணியம்பாடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற ஓபிஎஸ் அணியின் வாணியம்பாடி நகர செயலாளர் கோபி சங்கர் ரேவதி ஆகியோரின் மருமகள் நித்தியா சீனிவாசன் என்பவரின் சீமந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வாழ்த்தினார்.முன்னதாக வாணியம்பாடிக்கு வருகை தந்த ஓபிஸ் க்கு கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கும் இடையே கருத்துவேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம், “இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். இருந்தாலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் சிறப்பாக பணியாற்றியவர் என்று பதில் அளித்தார்.
வரி கட்டாமல் மது பாட்டில்களை நேரடியாக டாஸ்மார்க் கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது ஒரு மோசமான செயல். அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1000 கோடி முறையீடு நடந்திருப்பதாக செய்திகள் வருகிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது. தற்போது தான் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பின்னர் யார் தவறு செய்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகும்.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக கொடுத்துள்ளார்கள். அதே போன்று பிரிந்துள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து 2026ம் சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இது நடக்க வேண்டும் என்றால் ஈகோ பிடித்து பிரிந்து கிடக்கும் தலைவர்கள் எல்லாம் ஈகோவை விட்டு ஒன்று சேரவேண்டும். எல்லாரும் ஒன்று சேர்ந்து அதிமுக ஆட்சி அமைக்கும்” என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!