சென்னையில் பகீர்... பூங்காவில் தீக்குளித்த இளம்பெண்!

 

சென்னையில், பூங்காவில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

சென்னை காசித் தியேட்டரை அடுத்துள்ள ஜாபர்கான்பேட்டை திருநகர் பகுதியில் மாநகராட்சி பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நேற்றிரவு 7 மணி அளவில் இளம்பெண் ஒருவர் திடீரென, தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த  உஷா என்பவர் தீக்குளித்த பெண் என தெரிய வந்தது. குடும்ப தகராறு காரணமாக உஷா பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

இதேபோல் பலமுறை இதுபோன்ற தற்கொலைக்கு முயன்றயவர் நேற்று இரவு பூங்காவிற்கு வந்தவர் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது அருகில் இருந்த சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது என்று போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உயிரிழந்த உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!