அமெரிக்காவில் இரட்டைக் கொலை செய்து தலைமறைவான இந்தியர் ... துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி !
அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்த நசீர் ஹமீது 2017 ஆம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகனைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றார். இந்த இரட்டை கொலை வழக்கை அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரித்துவருகிறது.
நசீர் இந்தியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை பிடிக்க பல்வேறு துப்புகள் சேகரிக்கப்பட்டாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நசீர் ஹமீதின் இருப்பிடத்தை தெரிவிப்பவர்களுக்கு ரூ.45 லட்சம் மதிப்புள்ள வெகுமதியை வழங்குவதாக அமெரிக்க புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. தகவல் அளிப்போரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!