ஈரான் புதிய தலைவரும் கொல்லப்படுவார்... இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!
ஈரானின் முன்னாள் மதகுரு அலி அயத்துல்லா கமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கடந்த சனிக்கிழமை கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பிறகு, கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா கமேனி, ஈரானின் புதிய உச்ச தலைவராக நிபுணர்கள் சபையால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உள்ளன.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர், புதிய தலைவரை குறிவைக்கப்படும் இலக்காகக் கருதுவதாக அறிவித்துள்ளார். எந்தவொரு தலைவரும், ஈரானிய மக்களை ஒடுக்கவும், வெளிநாட்டு நாடுகளை அச்சுறுத்தவும் முயற்சித்தால், கொல்லப்படுவார் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மறைந்த கமேனியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி திடலில் மூன்று நாள்கள் வைக்கப்படும். புதிய தலைவரின் பெயர், அவர் எங்கு இருப்பார் என்பது முக்கியமல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!