undefined

‘ஜனநாயகன்’ சென்சார் சர்ச்சை… உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதி முடிவு!

 

 

நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்ட நிலையில் உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் படத்தின் வெளியீடு மீண்டும் தடைபட்டது. இந்த தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஜனவரி 15-ஆம் தேதி அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால், படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. புகார் வந்ததால் மறுஆய்வு குழுவுக்கு படம் அனுப்பப்பட்டதாக சென்சார் போர்டு விளக்கம் அளித்தது. 14 காட்சிகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தது. வழக்கின் இறுதி தீர்ப்பைப் பொறுத்தே ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!