பாரீஸ் லூவ்ரே அருங்காட்சியகத்தில் 900 கோடி நகை கொள்ளை... 2 பெண் உட்பட 4 பேர் கைது!
அக்டோபர் 19-ம் தேதி கிரேன் உதவியுடன் உள்ளே நுழைந்த மர்ம கொள்ளையர்கள் அருங்காட்சியக பாதுகாப்பைக் கடந்து, மன்னர் நெப்போலியன் கால கிரீடம் உள்பட எட்டு விலைமதிப்புயர்ந்த நகைகளை சுருட்டி சென்றனர். இந்த கொள்ளை உலகத்தையே உலுக்கியது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 909 கோடி என மதிப்பிடப்பட்டு, போலீசார் பல்வேறு திசைகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் திருப்பமாக, நேற்று நான்கு பேர் போலீசார் வலையில் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக தகவல் தெரிவிக்கிறது. இவர்களின் வயது 31 முதல் 40 வரை என கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த அக்டோபரில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கொள்ளை நகைகள் மீட்கப்பட்டதா என போலீஸ் அதிகாரிகள் இதுவரை தகவல் வெளியிடவில்லை; இதனால் இந்த வழக்கு இன்னும் மர்மத்தில் மூழ்கிக்கிடக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!