கேரளாவில் நாளை உள்ளாட்சி தேர்தல்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 11-ந் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். பணியாளர்கள் வாக்களிக்க வந்தவுடன் வேலைக்கு திரும்பலாம் அல்லது வேலை முடிந்தபின் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கியுள்ளது. தனியார் துறை நிறுவனங்கள், ஐ.டி. ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!