நவம்பர் 27ல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு... 6 நாள் கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் தொடர்ச்சியாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுகள் காரணமாக தென் இந்தியாவில் மழை நிலை மேலும் தீவிரமாகும் சூழல் உருவாகியுள்ளது. நவம்பர் 27-ஆம் தேதி மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவும் மேலும் வலுவடைந்து ஆந்திரா மாநிலத்தை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், வருகிற நவம்பர் 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், அது மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 24-ஆம் தேதி தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் தாக்கமாக, நாளை முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு பல இடங்களில் கனமழை தொடரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!