மணிமுத்தாறு அருவியில் குளிக்க மீண்டும் தடை!
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்தது. இதன் தாக்கமாக நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை கொட்டியது. நெல்லையில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது.
இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இன்று கூட வெள்ளப்பெருக்கு குறையாததால் இரண்டாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலையில் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் திரும்பிச் சென்றனர். நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!