திருவண்ணாமலையில் மார்கழி பௌர்ணமி கிரிவலம்... 2ம் தேதி இரவு உகந்த நேரம்!
திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிரிவலம் செல்ல உகந்த நேரம் 2ம் தேதி மாலை 6.45 மணிக்கு தொடங்கி, 3ம் தேதி மாலை 4.43 மணிக்கு முடிவடைகிறது. இதனால் 2ம் தேதி இரவு கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
பவுர்ணமியை முன்னிட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை – திருவண்ணாமலை இடையே வேலூர், விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தொடர்ந்து, 3ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. அந்த நாளில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் மற்றும் மாட வீதி உலா நடைபெற உள்ளது.
அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு தொடர்ச்சியாக பவுர்ணமி வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தரிசனத்திற்கு 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு மற்றும் முன்னுரிமை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பவுர்ணமி நாட்களில் ராஜகோபுரம் வழியாக பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!