undefined

 நடுவானில்   சிகிச்சைக்காக வந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

 
 

வங்காளதேசத்தின் டாக்காவைச் சேர்ந்தவர் அக்லிமா அக்தர் (32). இவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. சென்னை உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் விமானத்தில் அழைத்து வரப்பட்டார். டாக்காவிலிருந்து தனியார் விமானம் மூலம் சென்னைக்கு அவர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது நடுவானில் அக்லிமா அக்தருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக விமானப் பணிப்பெண்கள் விமானிக்குத் தகவல் கொடுத்தனர். விமானி சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டார். பயணி ஒருவருக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதாகக் கூறினார்.

விமான நிலைய மருத்துவக் குழுவினர் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி அக்லிமா அக்தரைப் பரிசோதித்தனர். ஆனால் அவர் இருக்கையில் சாய்ந்தபடி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!