“நமஸ்தே இந்தியா”.... மெஸ்ஸி இதயம் நெகிழ நன்றி!
இந்திய ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த மெஸ்ஸி, தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதல்நாள் கொல்கத்தாவில் நிகழ்ச்சி குழப்பமாக மாறினாலும், அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.
இந்தியாவில் இருக்கும் போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தில்லி முதல்வர் ரேகா குப்தா, ஐசிசி தலைவர் ஜெய் ஷா, ரோஹன் ஜேட்லி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரை மெஸ்ஸி சந்தித்தார். பின்னர் குஜராத் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் வனதாரா உயிரியல் பூங்காவையும் பார்வையிட்டார்.
இந்த பயணத்துக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட மெஸ்ஸி, “நமஸ்தே இந்தியா. தில்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா – என்ன ஒரு அற்புதமான அனுபவம். அன்பான வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் மனப்பூர்வமான நன்றி. இந்தியாவில் கால்பந்துக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!